மரம் வடிவத்திலான வை-ஃபை மற்றும் காற்று மாசுபாட்டினை அளக்கும் 'ஸ்மார்ட் ட்ரீ' மாநகராட்சியில் அறிமுகம்

கோவை மாநகராட்சியில் வை-ஃபை வசதியுடன் சூரிய ஆற்றலில் இயங்கும் 'ஸ்மார்ட் ட்ரீ' மாநகராட்சி அலுவலகத்தில் முதல் முதலில் அறிமுகபப்டுதப்படுள்ளது. இந்த ஸ்மார்ட் ட்ரீயில் இலவச வை-ஃபை வசதியும், காற்று மாசுபாட்டினை அளக்கும் கருவியும் இதில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மாநகராட்சிகளை மேம்படுத்தும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சூரிய ஆற்றலில் இயங்கும் 'ஸ்மார்ட் ட்ரீ' அமைக்கப்பட்டுள்ளது.

மரம் வடிவிலான ஸ்மார்ட் ட்ரீ:



மரத்தைப் போன்று வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் ட்ரீ இந்தியாவில் முதல்முறையாக பொது மக்களுக்கு நிழல் தரும் வகையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு 'ஸ்மார்ட் ட்ரீ' அமைப்பதற்கு 3.5 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. 9 அடி ஆழத்தில் கான்ங்கீரட் மூலமாக தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 12 அடியாகும். 400 சதுரஅடியில் தரை தளத்தில் செயற்கை புல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் பொதுமக்கள் அமருவதற்கு இருப்பிடம் வசதியும் இந்த ஸ்மார்ட் ட்ரீ-யின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6 பேனல்கள் மூலம் 120 சதுரடியில் மேல் பகுதியில் சோலார் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூரிய ஆற்றல் கொண்ட சோலார் மூலம் ஒரு நாளைக்கு 8 யூனிட் வரை மின்சாரம் பெற முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் ட்ரீயில் இலவச வை-ஃபை வசதியும், காற்று மாசுபாட்டினை அளக்கும் கருவியும் இதில் அமைக்கப்பட்டுள்ளது.



இது குறித்து பேசிய கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன், 'முதல்கட்டமாக மாநகராட்சி முழுவதும் இது போன்ற சுற்றுச்சூழலுக்கு நன்மையான 30 'ஸ்மார்ட் ட்ரீ' அமைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் தரப்பிலும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. டெல்லியிலுள்ள ஸ்மார்ட் சிட்டி ஆணையமும் இத்திட்டத்தைப் பாராட்டியுள்ளது' எனக் கூறினார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...