கோவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி துவக்கம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நாடு முழுவதும் வருடந்தோறும் அனைத்து மத, சமூக மக்களோடு இணைந்து நோன்பு துறக்கும் நிகழ்ச்சியினை நடத்தி வருகின்றது. சமூக நல்லிணக்கம் வலுப்பட நடத்தப்படும் இந்நிகழ்ச்சிகளில் பல்வேறு சமூக மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர். கோவையிலும் இப்படிப்பட்ட பல்வேறு நிகழ்வுகளை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகர கிளை நடத்தி வருகிறது.



அதனடிப்படையில் கடந்த ஞாயிறன்று கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள மஸ்ஜிதுல் இஹ்சானில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பி.எஸ்.உமர் ஃபாரூக் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமான பள்ளிவாசல் எதற்காக என்பது குறித்தும் பள்ளிவாசலில் முஸ்லிம்கள் கடைபிடிக்கும் தொழுகையை பற்றியும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து நோன்பு துறந்தனர்.



இதனைத் தொடர்ந்து, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாவட்டத் தலைவர் ஜனாப்.கே.ஏ.செய்யது இப்ராஹீம் தலைமையுரையாற்றினார். பின்னர், நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர் சென்னை புதுக்கல்லூரி வேதியியல் துறையின் உதவிப் பேராசிரியர்.ஃபரீத் அஸ்லம் சிறப்புரையாற்றினார். நோன்பு எப்படிப்பட்ட தனிமனித மற்றும் சமூகத்தை உருவாக்க விரும்புகின்றது என்பது பற்றி மிக விரிவாக எடுத்துரைத்தார். மேலும், சமூக நல்லிணக்கம் தமிழகத்தின் அடையாளம் என்றும், அதனை வலுப்படுத்துவதில் நாம் ஒவ்வொருவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.



இந்நிகழ்வில் பெண்கள் உட்பட 600-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக, இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...