கோவை சிபிஎம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் பாஜக-வை தொடர்புபடுத்துவது கண்டிக்கத்தக்கது- பாஜக வானதி சீனிவாசன்

கோவை சிபிஎம் கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பாஜக மீதும், இந்து அமைப்பினர் மீதும் சிபிஎம் கட்சியினர் குற்றம்சாட்டுவது கண்டிக்கத்தக்கது என பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், யாரும் குறை சொல்ல முடியாத வேட்பாளராக ஜனாதிபதி வேட்பாளரை பாஜக அறிவித்துள்ளது. போட்டியின்றி ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யவே பாஜக விரும்புகிறது. பாஜக சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக பட்டியல் இனத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த ஒருவரை நிறுத்தியுள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போன்றோர் விமர்சனம் செய்வது சரியல்ல.

ஜி.எஸ்.டி மசோதாவினை தமிழக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டதற்கு தமிழக அரசிற்கு பாஜக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. கோவையில் ஜி்.எஸ்.டி குறித்து விளக்கம் அளிக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வரும் 22-ம் தேதி  வரவுள்ளார். பீளமேடு பகுதியில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறும். கோவையில் உள்ள தொழில் முனைவோர்கள் ஜி.எஸ்.டி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற வாய்ப்பினை ஏற்படுத்தப்பட்டுள்ளது. துறை சார்ந்த அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டு விளக்கம் அளிக்க உள்ளனர். அன்றைய தினம் மாலை திருப்பூருக்கு செல்லும் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ஜி.எஸ்.டி தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார். 

கோவை சி.பி.எம் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பாஜக மீதும், இந்து அமைப்பினர் மீதும் சிபிஎம் கட்சியினர் குற்றம் சாட்டுவது கண்டிக்கத்தக்கது. சிபிஎம் கட்சியினர் பொறுப்புணர்வு இல்லாமல் ஆதாரம் இன்றி பேசக்கூடாது. அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்துவதை பாஜக எப்போதும் ஆதரிக்காது.

ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் இது வரை 40,000 பேர் பதிவு செய்துள்னர். நாளை யோகா தினத்தை முன்னிட்டு கோவையில் பகுதி வாரியாக பாஜக சார்பில் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...