தொழிலாளர் நலத்துறையின் மூலம் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கணினி செயலி அறிமுகம்

கோவை மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறையின் மூலம் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கணினி செயலி வெளியிடும் நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கோவை மாவட்ட தொழிலாளர் நலத்துறையின் மூலம் இன்று நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு செயலி வெளியிடும் நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு ராஜவீதி துணி வணிகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொழிலாளர் நல துணை ஆணையர் தமிழரசி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழச்சியல் துணை ஆணையர் தெரிவித்ததாவது:-

காலத்திற்கேற்றவாறு நுகர்வோர்களின் பாதுகாப்பை விருத்தி செய்கின்ற வகையில் அதிகபட்ச சில்லரை விலையைவிட அதிகவிலையில் விற்க்கப்படும் பொருட்கள் மற்றும் எடையளவுகள் குறித்து புகார் தெரிவிக்க செயலிகளை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் முத்திரையிடப்படாத எடை அளவுகள் தொடர்பான குறைபாடுகள் மற்றும் தாங்கள் வாங்கும் பொட்டல பொருட்களின் தயாரிப்பாளர், பொட்டலமிடுபவர், இறக்குமதியாளர் பெயர், முகவரி, நிகர எடை, பொட்டலமிடப்பட்ட மாதம் மற்றும் வருடம், அதிகபட்ச சில்லரை விற்பனை விலை இவற்றில் ஏதேனும் விடுபட்டு இருந்தால் தொழிலாளர்துறையின் மூலம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள TN-LMCTS எனும் Mobile App மூலம் புகார் தெரிவிக்கலாம்.

மேலும் பொட்டல பொருட்கள் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலும் நுகர்வோர் புகார் தெரிவிக்கலாம். கூகுல் இணையத்தில் பிளே ஸ்டோரில் சென்று இந்த செயலியை பதிவிறக்கம் செய்து நுகர்வோர்கள் எளிதில் புகார் தெரிவிக்கலாம். மேலும், கோவை மாவட்ட தொழிலாளர் துறை ஆய்வர்களிடமோ, சரக ஆய்வாளர்களிடமோ புகார் தெரிவிக்கலாம். 

நுகர்வோரிடமிருந்து தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் மீது மேற்கண்ட குறைகள் தொடர்பாக புகார்கள் பெறப்படின் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு சட்டமுறை எடையளவு  சட்டம் 2009 மற்றும் பொட்டலப்பொருட்கள் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே கோவை மாவட்டத்தில் உள்ள நுகர்வோர்கள் சட்டமுறை எடையளவு மற்றும் பொட்டலப்பொருட்கள் தொடர்பான புகார்களை மேற்படி TN-LMCTS எனும் கணினி செயலி பயன்படுத்தி புகார்கள் பதிவு செய்யலாம். அதற்கான உடனடி நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்படும். மேலும் இச்செயலி குறித்த விழிப்புணர்வு அனைவரிடமும் கொண்டு சேர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இந்நிகழச்சியில் தொழிலாளர் ஆய்வாளர் முருகேசன் நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...