தமிழகத்தில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்- மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேட்டி


தமிழகத்தில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேட்டியளித்தார்.

கோவை மற்றும் திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், 

எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைவதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு தரும் என முதல்வர் கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது. கணினி வழி ஜிஎஸ்டி தொடர்பாக ஏற்படும் பாதிப்புகள், சந்தேகங்கள் குறித்து கோவை, திருப்பூர் சிறு, குறு தொழில் நிறுவனங்களிடம் நேரடியாக விளக்கப்படவுள்ளது. அறிவித்தப்படி ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டாலும் அடுத்த 3 மாதங்களுக்கு வரி விதிப்பில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்படும்.

குடியரசுத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. அவரை வேண்டாம் என்று கூறுவதற்கு எந்த காரணங்களும் எதிர்க்கட்சிகளிடம் இல்லை. ராம்நாத் கோவிந்த் செய்தி தொடர்பாளராக இருந்தபோது கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்களை "ஏலியன்ஸ்" என்று கருத்து தெரிவித்ததாக சொல்லப்படுவது முற்றிலும் பொய்" இவ்வாறு மத்திய அமைச்சர்  நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...