நீதித் துறையில் லஞ்சத்தை எதிர்த்து போராடி கைதானதற்காக மகிழ்ச்சி அடைகின்றேன்- ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன்



நீதித் துறையில் லஞ்சத்தை எதிர்த்து போராடி கைதானதற்காக மகிழ்ச்சி அடைகின்றேன் எனவும், இந்திய நீதித்துறையில் நான் தான் ஹீரோ எனவும் கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் தெரவித்தார்.

கோவையை அடுத்த ஈச்சனாரி அருகே மாச்சேகவுண்டன் பாளையம் என்ற இடத்தில் தலைமறைவாக இருந்த நீதிபதி கர்ணன் செவ்வாயன்று இரவு மேற்கு வங்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை சென்னை அழைத்துச் செல்ல கோவை விமான நிலையத்திற்கு காவல் துறையினர் அழைத்து வந்தனர். கோவை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, நீதித்துறையில் லஞ்சம் இருக்கனும் என உச்ச நீதி மன்றம் சொல்கிறது. லஞ்சம் கூடாது என நான் சொல்கிறேன். இது தான் தன் மீதான வழக்கு. காவல் துறையினர் சட்டப்படி செயல்படுகின்றனர். அவர்கள் மீது எந்த புகாரும், குறைபாடும் இல்லை. என்னுடைய போராட்டம் தொடரும். நான் குற்றவாளியல்ல. நீதித்துறையில் நான் ஹீரோ. தேசமக்களுக்காகவும் தேச நலனுக்காகவும் நான் போராடுகிறேன். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். 

நீதித்துறை அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றத்தை சேர்ந்த 8 நீதிபதிகளுக்கு தண்டனை விதித்து இருக்கிறேன். அவர்களுக்கு 5 ஆண்டு தண்டனை விதித்ததை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை.

தாழ்த்தப்பட்ட சமூக நீதபதியான தனது உத்தரவுகள் ஏன் அமல்படுத்தப்படவில்லை. உயர் வகுப்பு நீதிபதிகளின் உத்தரவுகள் மட்டும் அமல்படுத்தப்படுகின்றன. 

நீதித்துறையில் லஞ்சமும், சாதியமும் உள்ளது. நீதித் துறையில் லஞ்சத்தை எதிர்த்து போராடி கைதானதற்காக மகிழ்ச்சி அடைகின்றேன்" என்றார்.

முன்னதாக, பேட்டியின் போது காவல்துறையினர் சிலர் இடையூறு செய்த போது கோபமடைந்த நீதிபதி கர்ணன், நான் தீவிரவாதியல்ல எனவும் காவல் துறையினர் ஒதுங்கி நில்லுங்கள் எனவும் மக்களுக்கு செய்தியை சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து விமானம் மூலம் நீதிபதி கர்ணன் சென்னை அழைத்துச் செல்லப்பட்டார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...