ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் அதிகளவில் யோகா கற்க வேண்டும்- ஈஷாவில் யோகா நிகழ்ச்சியில் ஆளுநர் பேச்சு


உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

3 வது உலக யோகா தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ்சர்மா, ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.



இதனைத்தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் வித்யசாகர்ராவ் பேசுகையில், யோகா என்பது இந்தியா உலகிற்கு கொடுத்த பரிசு. மன அழுத்தம் என்பது அனைத்து துறைகளிலும் உள்ளது. அதனை நீக்க சிறந்த வழி யோகா. 

ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் அதிகளவில் யோகா கற்க வேண்டும். யோகா மூலம் போதைக்கு அடிமையானவர்களை மீட்க முடியும். தமிழகம் மற்றும் மஹாராஷ்டிராவில் தனது கட்டுப்பாட்டில் உள்ள 40 பல்கலைக் கழகங்களில் யோகா கற்றுத் தர அறிவுறுத்தப்படும்" என்றார்.

இதற்கு முன்னதாக பேசிய ஜக்கி வாசுதேவ், பள்ளி மாணவர்களிடம் தற்கொலை எண்ணம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஈஷா யோகா மையம் சார்பில் யோகா கற்றுத்தரப்படுத். நல்ல மனிதர்களை உருவாக்குவதன் மூலமே நல்ல நாட்டை உருவாக்க முடியும். யோகா மூலம் நல்ல மனிதர்களை உருவாக்க முடியும்" என்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...