கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர்கள் பணிக்கான நேர்முக தேர்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அலுவலக உதவியாளர்கள் பணிக்கான நேர்முகத் தேர்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.



கோவை மாவட்டத்தில் வருவாய் துறையில் காலியாக உள்ள 22 அலுவலக உதவியாளர்கள் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கக் கோரி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

இதனையடுத்து இந்த பணியிடங்களுக்கு 2619 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் தகுதியானவர்கள் என 1322 பேர் தேர்வு செய்யப்பட்டு நேர்முக தேர்விக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நேர்முக தேர்வு நடைபெற்று வருகிறது. உதவி ஆட்சியர் நிலையில் உள்ள 7 அதிகாரிகள் இந்த நேர்முக தேர்வை நடத்தி வருகின்றனர். அலுவலக உதவியாளர் பணியில் உள்ள 22 காலி பணியிடங்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேர்முக தேர்வில் பங்கேற்க வந்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...