கொலை வழக்கு சாட்சிகளை வழக்கறிஞர் மிரட்டுவதாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார்

கோவை சிவானந்தாகாலனி பகுதியை சேர்ந்த அம்மாசை (43) என்ற பெண் கடந்த 2013-ம் ஆண்டு வழக்கறிஞர் ராஜவேல் என்பவரது அலுவலகத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகிறது. அம்மாசை கொலை வழக்கில் முறையான நீதி வேண்டி சிவானந்தாகாலனி பகுதியை சேர்ந்த ஆதிகணேசன் என்பவர் 'அம்மாசை கொலை- நீதிக்கான கூட்டமைப்பு' என்ற அமைப்பு தொடங்கினார்.



இவ்வழக்கு விசாரணை நேற்று முன் தினம் கோவை விரைவு நீதி மன்றத்தில் நடைபெற்றது. அப்போது சாட்சியளிக்க சென்ற ஆதிகணேசனுக்கு வழக்கறிஞர் ராஜவேல் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, இது குறித்து ஆதிகணேசன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும், அம்மாசை கொலைவழக்கு சாட்சியங்களுக்கு நீதிமன்றத்தில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் ராஜவேல் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆதிகணேசன் அம்மனுவில் கூறியுள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...