ஜிஎஸ்டி வரியை பூதம் என நினைத்து தொழில்துறையினர் பயப்படத் தேவையில்லை- நிர்மலா சீத்தாராமன்

ஜிஎஸ்டி வரியினை பூதம் என நினைத்து தொழில் துறையினர் பயப்படத் தேவையில்லை எனவும், ஆரம்ப காலங்களில் தவிர்க்க முடியாத சிரமங்களை ஏற்படுத்தினாலும் நாட்டிற்கு பயனளிக்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.



கோவை சிட்ரா பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பாஜக சார்பில் ஜிஎஸ்டி வரி நடைமுறை குறித்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் மற்றும் தொழில்துறையினை சார்ந்தவர்களும் பங்கேற்றனர்.



இந்நிகழ்ச்சியில் ஜிஎஸ்டி தொடர்பான தொழில் துறையினரின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.  இதையடுத்து நிர்மலா சீதாராமன் பேசுகையில், ஜிஎஸ்டி தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்து சந்தேகம் மற்றும் கேள்விகளுக்கு பதிலளிக்க அந்தந்த தொழில் வர்த்தக சபைகளில் ஏற்பாடு செய்ய வேண்டும். ஜிஎஸ்டி கீழ்மட்ட ஊழலை ஒழிக்க சிறந்த திட்டம்.இத்திட்டத்தை எதிர்ப்பது நாட்டுக்கு நல்லத்தல்ல. ஜிஎஸ்டி நிறைவேற்றப்பட்டாலும் இன்னும் இரு மாதங்களுக்கு அதில் தொழில் துறையினர் தவறாக தகவல்கள் பதிவு செய்தாலும் அபராதம் வசூலிக்கப்படாது. 

ஜிஎஸ்டி வரிவிதிப்பு என்பது பாஜக அரசு மட்டும் கொண்டு வந்ததல்ல. இது அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள், தொழில்துறையினர் உள்ளிட்டோருடன் கலந்து பேசி வரி விதிப்பு முடிவு செய்யப்பட்டது. ஜிஎஸ்டியை பூதம் என நினைத்து தொழில் துறையினர் பயப்படத் தேவையில்லை. ஆரம்ப காலங்களில் தவிர்க்க முடியாத சிரமங்களை ஏற்படுத்தினாலும் நட்டிற்கு பயனளிக்கும்" என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.



தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீத்தாராமன், நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையினால் சுங்கச்சாவடி மற்றும் சோதனைச் சாவடிகளில் காத்திருக்கும் நேரம் பாதியாக குறையும். ஜிஎஸ்டியினால் தொழில் துறையினருக்கு பாதிப்பு ஏற்படும் என்பது தவறான பிரச்சாரம்" என்றார். எனவும் தெரிவித்தார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...