தேடப்படும் குற்றவாளிகள் மற்றும் திருடு போன வாகனங்களை கண்டுபிடிக்க நவீன சிசிடிவி காமிராக்கள்: கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் தகவல்

காவல்துறையால் தேடப்படும் நபர்களை கண்டுபிடிப்பதற்கும், திருடு போன வாகனங்களை அடையாளம் கண்டு மீட்கும் வகையில் கோவை மாநகரில் நவீன சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட உள்ளதாக கோவை மாநகர காவல்துறை (போக்குவரத்து) துணை ஆணையர் துரை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கோவை மாநகரில் விபத்துக்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உதவி ஆணையர்கள் மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், காவல்துறையினர் தேடிவரும் குற்றவாளிகளையும், திருடப்பட்ட வாகனங்களை அடையாளம் காணும் வகையிலும் நவீன சிசிடிவி காமிராக்கள் கோவையில் 15 இடங்களில் பொருத்தப்பட உள்ளது.

இந்த காமிரா 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்கும். காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் நபரின் புகைப்படம் காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ளீடு செய்யப்பட்டிருக்கும். அந்த நபர் காமிரா பொருத்தப்பட்டிருக்கும் வழியாக செல்லும் போது, அவரின் முகம் பதிவாவதோடு, அவரின் புகைப்படத்தையும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும்.

மேலும், நகரில் திருப்பட்ட வாகனங்களின் பதிவெண்களை உள்ளீடு செய்து வைத்திருப்பதன் மூலம், அந்த வாகனம் காமிராவில் பதிவானால், உடனடியாக அந்த தகவல் காவல்துறை கட்டுப்பட்டு அறைக்கு அனுப்பப்படும். இதனால், குற்றவாளிகளை மிக எளிதாக பிடிக்க முடியும்.

முதற்கட்டமாக மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ‘செக் போஸ்ட்’ல்  அடுத்த வாரத்தின் தொடக்கத்தில் இந்த நவீன காமிரா பொருத்தப்பட உள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...