காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக மீராகுமார் அறிவிப்பு

காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் மீராகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். 

ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு மாநில கட்சி தலைவர்களையும் தொடர்பு கொண்டு பாஜக ஆதரவு கோரி வருகிறது.

வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்து பாஜக தலைவர்கள் ஆதரவு கோரினார்கள். மேலும் தங்களுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வாய்ப்பில்லை என்றும் பாஜக-வினர் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இன்று ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டன. அப்போது, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் முன்னாள் சபாநாயகர் மீராகுமார் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...