உதகையில் கன மழை - மக்கள் மகிழ்ச்சி

உதகைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடும் வெயில் நிலவி வந்ததால் குடியிருப்பு பகுதிகள் மட்டுமின்றி வனப்பகுதிகளிலும் கடும் வறட்சி நிலை ஏற்பட்டது.

விவசாயத்திற்கான நீரில் தட்டுப்பாடு ஏற்பட்டு பெரும்பாலான பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த தேயிலை செடிகள் கருகின. மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில், தற்போது பருவமழை தொடக்கத்தின் காரணமாக அவ்வப்போது நீலகிரி, உதகை, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் இரவு, பகல் என மழை பெய்து வருகிறது.

உதகைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பகலில் பெய்யத்துவங்கிய மழை இரண்டு மணி நேரத்தினையும் கடந்து கன மழையாக பெய்து வருகிறது. உதகை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் இந்த மழையின் காரணமாக வனங்களில் பசுமை திரும்பும் என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...