தகுதியுள்ள மாணவர்களை நீட் தேர்வு தகுதியற்ற மாணவர்களாக்குகிறது -பொதுபள்ளிகளுக்கான மாநில மேடையின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு

சட்டசபை நடத்து கொண்டிருக்கும் வேளையில் இனிமேலாவது மாநில அரசு நீட் தேர்வு தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதத்தை நடத்தி மத்திய அரசிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் எனவும் நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசிற்கு மாநில அரசு எவ்வித அழுத்தமும் ஏன் தரவில்லை எனவும் பொதுபள்ளிகளுக்கான மாநில மேடையின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி எழுப்பியுள்ளார்.



கோவையில் பொதுபள்ளிகளுக்கான மாநில மேடையின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நீட் தேர்வு நடத்தியது ஜனநாயகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி எனவும் உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு நீட் தொடர்பாக வழங்கிய தீர்ப்பு என்னவென்றால் மாநிலங்களில் நிலவக்கூடிய அசாத்திய சூழல் பற்றி மாநில அரசுக்குதான் தெரியும் அதனால் மத்திய கல்வி நிறுவனங்கள் தவிர மற்றவைக்கு மாணவர்களை மாநில அரசே சேர்க்கலாம் என்று கூறியுள்ள நிலையில் மாநில அரசு நீட் தேர்வு நடத்தாமல் இருக்க என்ன செய்தது? என அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், நீட் தேர்வு மிகவும் குழப்பமான கல்வி சூழலை உருவாக்கியுள்ளதாகவும், தமிழக அரசு தமிழக மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை காவு கொடுக்க கூடாது எனவும் அவர் கூறினார். தகுதியுள்ள மாணவர்களை நீட் தேர்வு தகுதியற்ற மாணவர்களாக்குகிறது. அதனால் அதனை கைவிட தாங்கள் சொல்வதாகவும் அவர் தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியின் போது அறிவித்தபடி நீட் தேர்விற்கு எதிராக ஆளும் அதிமுக அரசு முழுவீச்சுடன் செயல்படவேண்டும். என அவர் கேட்டுகொண்டார். குறிப்பாக மத்திய அரசு மசோதாவை நிராகரித்து மாநில அரசு நீதிமன்றத்தை நாடாவிட்டால், நிச்சயமாக பொதுப்பள்ளிக்கான மாநில மேடை சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாகவும் அவர் தெரிவித்தார்.

நீட் தேர்விற்கு எதிராக குரல் கொடுக்கும் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளதாகவும், சட்டசபை நடத்துகொண்டிருக்கும் வேளையில் இனிமேலாவது மாநில அரசு நீட் தேர்வு தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதத்தை நடத்தி மத்திய அரசிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை என அவர் கூறினார். மேலும் மத்திய அரசிற்கு மாநில அரசு எவ்வித அழுத்தமும் ஏன் தரவில்லை என அவர் கேள்வி எழுப்பினார். நீட் தேர்வு தொடர்பாக ஒரு முடிவு வரும் வரை அனைத்து வேளாண்மை உள்ளிட்ட அனைத்து தொழிற்கல்விகளின் கவுன்சிலங்கையும் ஒத்தி வைக்க வேண்டும். எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...