கோவை கங்கா மருத்துவமனையில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்



இந்தியாவில் முதல் முறையாக ஏர் ஆம்புலன்ஸ் சேவை கோவையில் செயல்பட்டு வரும் கங்கா மருத்துவமனையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. 

கோவையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையான கங்கா மருத்துவமனை சார்பில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை வரும் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. விபத்தின் போது காயமடைபவர்களை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு வரவும், இருதய நோயாளிகள், உடல் உறுப்பு தானம் போன்றவற்றிக்கு இந்த சேவை அதிகளவில் உதவியாக இருக்கும். இந்த ஏர் ஆம்புலன்ஸில் 2 விமானிகள் 1 நோயாளி 1 மருத்துவர், 1 நோயாளியின் உறவினர் பயணிக்கலாம்.



மேலும், இதற்காக விமான போக்குவரத்துத் துறை அனுமதியுடன் பிரத்யேகமாக ஹெலிப்பேடு அமைக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் இந்த ஹெலிகாப்டரில் வைக்கப்பட்டு உள்ளது.



இரண்டு விமானிகள், தொழில் நுட்ப வல்லுனர்கள் இந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவைக்கு 1 மணி நேரத்திற்கு 1.25 லட்சம் வரை கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என கங்கா மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இன்று இந்த ஏர் அம்புலன்ஸ் சேவையின் பயண்பாடுகள் குறித்தும், மருத்துவர்கள், விமானிகள் உள்ளிட்டோர் அவசர கால பணிகள் குறித்தும் ஒத்திகை நிகழ்த்தினர்.



இதுகுறித்து, கங்கா மருத்துவமனை மருத்துவர் கூறுகையில், 1999 காலகட்டத்தில் நடைபெற்ற கார்கில் போரின் போது பாதிக்கப்பட்ட ஏராளமான போர் வீரர்கள் விமானம் மூலம் டெல்லி, காஷ்மீர், சண்டிகர் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லபட்டு காப்பாற்றப்பட்டனர். 17 இந்திய விமானங்களை ஏர் ஆம்புலன்ஸ் ஆக மாற்றலாம்.

1999 கார்கில் போருக்கு பிறகு இந்திய விமானப் படை ஏர் ஆம்புலன்ஸ் 2007-ல் துவங்கப்பட்டது. அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க இதில் அனைத்து வசதிகளும் உள்ளது. தனக்கு ஒரு விபத்து ஏற்பட்டு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கோல்டன் ஹவரில் காப்பாற்றப்பட்டேன். இதனாலேயே இந்த ஏர் ஆம்புலன்ஸ் முக்கியத்துவத்தை நான் அறிந்தேன். இம்மாதிரியான சேவைகளால் இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் மருத்துவ சேவை அளிக்க வாய்ப்புகள் உள்ளது" என்றார்.

இந்நிகழ்ச்சியின் போது, டாக்டர். ராஜசேகரன், டாக்டர். சண்முகநாதன், டாக்டர். ராஜசபாபதி, கணக வள்ளி சண்முகநாதன், ஏர் மார்ஷல் அனில் பெகல், ஏர் சீப் மார்ஷல் பிரேந்தர் சிங் தனோவா, மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...