கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் கொடியேற்றத்துடன் மகா கும்பாபிஷேக விழா துவக்கம்

கோவை சித்தாபுதூர் ஐயப்ப சுவாமி கோவிலில் 48-வது ஆண்டு திருவிழாவினை முன்னிட்டு சனிக்கிழமையன்று (நேற்று) இரவு 7 மணியளவில் கொடியேற்றத்துடன் விழா துவங்கப்பட்டது. இந்த வழிபாட்டு நிகர்ச்சில் கோவில் தந்திரி சிவபிரசாத்நம்பூதிரி தலைமை வகித்தார். இந்து சமய இணை ஆணையாளர் ஆ.இளம்பரிதி முன்னிலை வகித்தார். 



இதனைத்தொடர்ந்து, நாளை (ஜூன் 26) 2-ம் நாள் திருவிழாவையொட்டி காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இரவு 7 மணியளவில் ஐயப்ப சேவா சங்கத்தின் 62-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.



தொடர்ந்து, ஜூலை 1ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் பட்டிமன்றம், யானைகளுடன் ரதம், செண்டை வாத்தியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.



திருவிழா நாட்களில் தினமும் காலையில் யானை வாத்தியத்துடன் சிறப்புப் பூஜைகளும் நடைபெறவுள்ளது.



கோவையில் பிரசிதிபெற்ற சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலின் இச்சிறப்பு வழிபாட்டினைக் காண கோவை மட்டுமின்றி திருப்பூர், சேலம் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்ட மக்களும், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...