என் வழி தனி வழி, என் அப்பா வழி தனி வழி - கோவையில் நடிகர் கவுதம் கார்த்திக் பேச்சு

கோவை சாந்தி திரையரங்கில் ‘இவன் தந்திரன்’ படக்குழுவின் நடிகர் கவுதம் கார்த்திக், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். பின்னர் ‘இவன் தந்திரன்’ படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரய்லர் திரையிடப்பட்டது. ‘இவன் தந்திரன்’ படத்தின் படக்குழுவினர்களுடன் ரசிகர்களும் பாடல்கள் மற்றும் ட்ரய்லரை கண்டு ரசித்தனர்.



‘ஜெயம் கொண்டான்’, ‘சேட்டை’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் இப்படத்தில் நடித்துள்ளார். ஸ்ரத்தா ஸ்ரீநாத் என்ற கன்னட நடிகை ஹீரோயினாகவும், அர்ச்சனா ஸ்ரீ, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு வி.என்.மோகன், அபிரா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.



முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கவுதம் கார்த்திக்; "நான் தமிழ் படத்தில் இயக்குநர் மணிரத்தினம் தயாரிப்பில் வெளியான கடல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானேன். தமிழ் படத்தில் நான் நடிக்க எனது அப்பா முக்கிய காரணம். அப்பாவின் நடிப்பு வேற ட்ரெண்ட், நான் இன்னும் அவருக்கு சமமாக படங்களில் நடிக்கவில்லை. அவர் கூட நடிக்க நான் இன்னும் வளரனும்.

என்னோட ட்ராக்ல தான் நான் நடிகனும், அதுதான் அவரோட ஆசையும். தமிழ் படத்தில நான் இன்னும் பெரிய அளவில் சக்ஸஸ் பண்ணல, தமிழ் படத்தில் நடிக்கும் முன்பு மக்கள் மைண்ட்செட் எப்படி இருக்குனு புரிந்து நடிக்கனும், அது புரியாம தான் நான் நடித்த படம் பெரிய அளவில் ஓடவில்லை.

தற்போது ‘இவன் தந்திரன்’ படத்தில் தமிழ் மக்களுக்கு பிடித்த மாதிரி கதை கிடைத்துள்ளது. இந்த படம் முழுதும் சென்னையில் எடுக்கப்பட்டது. மழையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் காமெடி, செண்டிமெண்ட், கமர்சியல் எல்லாம் இருக்கு. இந்த படத்திற்கு பிறகு எனது அடுத்த படம் இந்திரஜித் வெளிவர உள்ளது. ‘இவன் தந்திரன்’ படம் ஜூன் 30ம் தேதி வெளியிடப்படவுள்ளது. குடும்பத்துடன் பார்த்து ரசிக்க சிறந்த படமாக இருக்கும்" என்றார்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...