மறைந்த பத்திரிகையாளர் அவனாசிலிங்கம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கண்கலங்கிய பத்திரிகையாளர்கள்

கடந்த 1975 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம், அவினாசியில் ஐயாசாமி, அம்புஜம் என்ற தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் அவனாசிலிங்கம். இவர், சன் தொலைக்காட்சியில் 20 வருடங்களாக பத்திரிகையாளராக பணியாற்றிய நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு உயிரிழந்தார்.



நேர்மையான பத்திரிகையாளராகவும், மக்கள் பிரச்சனைகளை ஊடகத்தின் வாயிலாக தீர்த்து வைத்த சமூக சேவகராகவும் வாழ்ந்து மறைந்த அவனாசிலிங்கத்தின் நினைவேந்தலை அனுசரிக்கும் விதமாக அவர் மறைந்த நாளன்று பத்திரிகையாளர்கள் நினைவேந்தல் செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்ச்சியின் போதும் ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று அவனாசிலிங்கம் அவர்களின் 4-ம் ஆண்டு நினைவேந்தல் கோவை ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் அனுசரிக்கப்பட்டது.



இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஊடகத்துறை வாயிலாக அவனாசிலிங்கம் செய்த சேவைகள் குறித்து உரையாற்றினர். 

நெகிழ்ச்சியான பத்திரிகையாளராய் மட்டுமின்றி நல்ல மனிதராக வாழ்ந்த அவனாசிலிங்கத்துடன் கழித்த தருணங்களை சக பத்திரிகையாளர்கள் கண்ணீர்மல்க வெளிப்படுத்தினர்.



நிகழ்வின் முடிவில், பத்திரிகையாகர்கள் சார்பில் மலைவாழ் மக்கள், மாணவர்கள் மற்றும் நூலகத்திற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...