காவல்துறையினர் பொய்வழக்கு புனைவதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதியினர் தற்கொலை முயற்சி- பரபரப்பு


கோவை மாவட்டம், காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பிஜிலு. இவரது மனைவி இந்து. இவர்கள் அதேப் பகுதியில் வீடு கட்டுவதற்காக தனியாரிடம் கடன் பெற்றுள்ளனர். இதில், முழுமையாக கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில், பிஜிலு-விற்கு கடனுதவி அளித்தவர் குண்டர்கள் மூலம் கடந்த மாதம் பிஜிலுவின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பிஜிலு மற்றும் அவரது மனைவி இந்து சரவணம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்ற நிலையில் காவல்துறையினர் இந்த தமிபதியினர் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். தொடர்ந்து, ஜாமீனில் வெளியே வந்த இந்த தம்பதியினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து, பிஜிலு, இந்து தம்பதியினர் கூறுகையில், நாங்கள் வீடுகட்ட கடன் அளித்த நபர் தற்போது குண்டர்கள் உதவியுடன் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். இதுகுறித்து சரவணம்பட்டி காவல்துறை ஆய்வாலர் ராஜ்குமாரிடம் புகார் அளித்த நிலையில் அவர் எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து விட்டார். மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.

முன்னதாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதியினர் உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...