வெள்ளியங்கிரி தூய்மைப் பணியில் தென்கைலாய பக்தி இயக்கம்

தென்கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையைத் தூய்மைப்படுத்தும் பணியில் "தென்கைலாய பக்தி இயக்கம்" பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது.



அதன்படி, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலையில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் திட்டத்தை தொடர்ச்சியாக இவ்வாண்டும் நடைமுறைப்படுத்தி வருகிறது. 

ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பக்தர்களும் இயற்கை இரசிகர்களும் வெள்ளியங்கிரி மலையில் ஏறுவார்கள். ஒருபுறத்தில் தனிமனிதருக்கு இந்த பயணம் ஒரு மிகப்பெரிய அனுபவத்தை ஏற்படுத்தினாலும் ஏராளாமான மக்கள் இங்கு வந்து செல்வதால் இந்த இடம் பிளாஸ்டிக் குப்பைகளால் மாசுபடுகிறது. இது இங்குள்ள வன உயிர்களுக்கும் மண் வளத்திற்கும் பாதிப்பாக அமைகிறது.



வெள்ளியங்கிரியின் இயற்கை, அழகு மற்றும் புனிதத்தை காத்திடும் பொருட்டு, தென்கைலாய பக்தி இயக்கம், வெள்ளிங்கிரி சுத்திகரிப்பு பணியை தங்கள் செயல் திட்டத்தில் ஒருமுக்கிய அம்சமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.



உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தென்கைலாய பக்தி இயக்கம் சார்பில் வெள்ளிங்கிரி சுத்திகரிப்பு பணி கடந்த நான்கு ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படுத்தி வருகிறது. ஜூன் 25 ம் தேதியன்று நடைபெற்ற சுத்திகரிப்பு பணியில் சென்னை, கும்பகோணம், வேளூர், திருச்சி, பொள்ளாச்சி, சிதம்பரம், பெங்களூர், ஹைதெராபாத், சிவகாசி, மதுரை, நாகப்பட்டினம் மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்து 120-க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள், கேஜி கல்லூரி மற்றும் எஸ்என்எஸ் ராஜலட்சுமி கல்லூரியின் என்எஸ்எஸ் மாணவர்கள் மற்றும் பேருரை சேர்ந்த சிவபக்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று வெள்ளியங்கிரி மலைப்பாதை மற்றும் அடிவார கோவில் சுற்றியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் சுத்திகரிப்பு பணி மேற்கொண்டனர்.



அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த சுத்திகரிப்பு பணியில் சுமார் 400 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டது. நான்று ஞாயிற்றுக்கிழமைகள் நடந்த இந்த சுத்திகரிப்பு பணி மூலம் சுமார் 1200 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக இதன் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...