மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு கோவையில் விண்ணப்ப வநியோகம் துவக்கம்

கோவையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் விநியோகத்தை, கோவை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன் துவக்கி வைத்தார். மாணவர் சேர்க்கைக்கு நீட் மதிப்பெண்களுடன் 12-ம் வகுப்பு மதிப்பெண்ணையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை ஹோப்காலேஷ் பகுதியில் செயல்பட்டு வரும் கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்கள் விநியோகத்தை, அக்கல்லூரி முதல்வர் அசோகன் துவக்கி வைத்தார்.

இந்த விண்ணப்பங்களை வாங்குவதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் இன்று மருத்துவக் கல்லூரி வளாகத்தில் குவிந்துள்ளனர்.

முதல் நாளில் மருத்துவ படிப்பிற்கான 750 விண்ணப்பங்கள் வழங்கப்படுவதாகவும், அதற்கு பின்னர் அரசு அனுப்பும் விண்ணப்பங்களை பொறுத்து வரும் ஜூலை 7-ம் தேதி விண்ணப்பங்கள் வழங்க உள்ளதாகவும் மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகன் தெரிவித்தார்.

மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுவதாகவும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, நீட் தேர்வு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மன வேதனை அளித்து இருப்பதாகவும், பலரின் மருத்துவ கனவை நீட் தேர்வு பறித்து இருப்பதாகவும் பெற்றோர்கள் வேதனை தெரிவித்தனர்.

பனிரெண்டாம் வகுப்பில் 1180 மதிப்பெண்களுடன், 198 கட் ஆப் மதிப்பெண் வாங்கிய மாணவர், நீட் தேர்வில் வெறும் 204 மதிப்பெண்கள் மட்டுமே வாங்கி இருப்பதாக கூறிய நிர்மலா என்ற பெற்றோர், நீட் தேர்விற்கு போதிய கால அவகாசம் அளிக்காததே இதற்கு காரணமெனவும், மாணவர் சேர்க்கைக்கு நீட் மதிப்பெண்களுடன் 12-ம் வகுப்பு மதிப்பெண்ணையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...