திருடன் என்று பழி சுமத்தியதால் தொழிலாளி தற்கொலை

கோவை கெம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சூர்யகலா. இவர்களுக்கு ஸ்ரீகவுரி என்ற 5 வயது பெண்குழந்தை உள்ளது.

ராமச்சந்திரன் தங்க நகை தொழில் செய்து வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன் நண்பர்களுடன் சேர்ந்து தொழில் துவங்கிய ராமச்சந்திரன் நகை செய்வதற்காக தங்க கட்டிகளை வாங்கியுள்ளார். ஆனால், குறித்த நேரத்தில் நகை செய்து தரவில்லை என்றும், இதனால், நண்பர்கள் அவருக்கு திருடன் என்று பழி சுமத்தியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த ராமச்சந்திரன் மும்பையில் சிறிது நாட்கள் தங்கியிருந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோவை வந்த அவர் மன உளைச்சல் அடைந்தார்.

இந்நிலையில் நேற்று விஷம் குடித்த ராமச்சந்திரன் செல்வபுரம் பேருந்து நிலையம் அருகே மயங்கி விழுந்து பலியானார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் செல்வபுரம் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் வழக்கு பதிந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...