முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்த தனியார் நிறுவனத்தைக் கண்டித்து ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்டதால் கோவையில் தனியார் நிறுவன ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நிறுவனத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம், ஈச்சனாரி அடுத்த செட்டிபாளையம் பகுதியில் கில்பர் கோ வீடர் ரூட் இந்தியன் பிரைவேட் லிமிடட் என்ற தனியார் எம்.என்.சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு இந்திய அரசின் பெட்ரோலிய துறையின் ஒப்பந்தத்தின் பேரில் பெட்ரோல் பம்புகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் 100 நிரந்தர ஊழியர்களும், 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களும் என 250-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.



இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களை திங்கட்கிழமை முதல் பணிக்கு வரவேண்டாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஒப்பந்த ஊழியர்கள் நிறுவனத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கில்பர் கோ வீடர் ரூட் இந்தியன் பிரைவேட் லிமிடட் நிர்வாகத் தரப்பில், அரசின் ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டதாகவும் இதனால் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க இயலாது என விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவன ஊழியர்கள் கூறுகையில், திடீரென ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்வது இந்நிறுவனத்தின் வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்கவே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். 

எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென பணிக்கு வர வேண்டாம் என நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனை நம்பி உள்ள தொழிலாளர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்படக் கூடும்.

மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும் அல்லது மூன்று மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...