தேயிலை தொழிலாளர்களுக்கு தினசரி கூலி உயர்த்த தமிழ்நாடு அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்

வால்பாறை தேயிலை தொழிலாளர்கள் சில தொழிற் சங்கங்களால் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். கேரளா மாநிலத்தில் தேயிலை தொழிலாளர்களுக்கு தினசரி கூலியாக ரூபாய் 500 வரை கேரளா அரசு வழங்கி வருகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு தேர்தல் நேரத்தில் எம்.எல்.ஏ, எம்.பிக்கள் தேயிலை தொழிலாளர்களுக்கு தினசரி கூலி உயர்த்தி தருவதாகக் கூறி வாக்குறுதி அளித்தனர். அதனை பெரிதும் நம்பிய அவர்கள் வயிற்று பிழைப்புக்காக கடும் மழையிலும், பனியிலும், யானை, சிறுத்தை, புலி போன்ற காட்டு மிருகங்களின் தொல்லையிலும் அடிமை போல் வாழ்க்கை வாழும் அவலம் நிலையில் தள்ளப்பட்டுள்ளனர்.



இதனை தொடர்ந்து, வால்பாறை தேயிலை தொழிலாளர்கள் சில தொழிற் சங்கங்களால் நிர்வாகத்துடன் மூன்று கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் தோல்வி அடைந்தது. எனவே, தேயிலை தொழிலாளர்களுக்கு உரிய சம்பள வழங்கக்கோரி நிர்வாகத்துடன் தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தி இதற்கு தீர்வு காண வேண்டும் என தேயிலை தொழிலாளர்களின் எதிர்பார்பாக உள்ளது.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...