ஜி.எஸ்.டி அமல்படுத்துவது குறித்து வணிகத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

நாடு முழுவதும் பொருட்கள், சேவைகள் மீது ஒரே சீரான வரி விதிப்புக்காக சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) முறை வருகிற (ஜூலை) 1–ந் தேதி முதல் இந்த வரிவிதிப்பை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து ஜி.எஸ்.டி அமல்படுத்துவது தொடர்பாக நேற்று இரவு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கோவை மண்டல வணிக வரித்துறை அலுவலகத்தில் கோவை மண்டல கலால் மற்றும் சுங்கவரித் துறை கூடுதல் ஆணையர் என்.ஜே.குமரேசன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக சிறுதுளி அமைப்பின் தலைவர் வனிதா மோகன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினார். பின்னர் வணிகத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கோவை மண்டல கலால் மற்றும் சுங்கவரித் துறை கூடுதல் ஆணையர் என்.ஜே.குமரேசன் ஐ.ஆர்.எஸ், கூறியதாவது; நாடு முழுவதும் பொருட்கள், சேவைகள் மீது ஒரே சீரான வரி விதிப்புக்காக மத்திய அரசு ஜி.எஸ்.டி முறையை ஜூலை 1ம் தேதி அமல்படுத்த திட்டமிட்டு இருந்தது. தற்போது அமல்ப்படுதப்பட்டுள்ள இந்த வரி வரவேற்க்கதக்கது. இதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். ஜி.எஸ்.டி குறித்து சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களை தெரிவிக்கலாம். இந்த சேவை மையத்துக்கு உரிய பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் இதில் வணிகர்கள் தங்களை இணைத்துக் கொள்ளலாம். விற்பனை வரி 15ஆண்டுகளுக்கு முன்னர் அமல்படுதுவதாக இருந்தது தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி பெருக வாய்ப்புள்ளது. இதன் மூலம் நாட்டு மக்களுக்கு பொருளாதரத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.



Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...