ஓய்வுபெற்ற மாநகராட்சி பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.



மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் கே.சி.கிரேஸி (நகர சுகாதார செவிலியர்), து.மகாலட்சுமி (சமுதாய அமைப்பாளர்), 13 தேர்ச்சி திறனற்ற பணியாளர்கள் மற்றும் 33 துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இவர்களுக்கு, சால்வை அணிவித்த மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் ஓய்வுப் பலன்களாக ரூ.2 கோடி மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையர் (நிர்வாகம்) செந்தில்குமார் ரத்தினம், மத்திய மண்டல உதவி ஆணையர் (பொ) என்.அண்ணாதுரை மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...