புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரத்தினபுரி பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை இரத்தினபுரி பகுதி 7ம் நெம்பர் பாலம் அருகே 1554-ம் எண் கொண்ட டாஸ்மாக் கடையும், புது பாலம் அருகே 1552 எண் கொண்ட இரண்டு மதுபான கடைகள் இயங்கி வரும் நிலையில் சுண்ணாம்பு கால்வாய் அருகில் மேலும் ஒரு டாஸ்மாக் கடை அமைக்க மாவட்ட நிர்வாகத்தால் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் மீனா லோகு தலைமையில் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது, இரத்தினபுரி பகுதி கொலை, கொள்ளை மற்றும் சமூக விரோத செயல்கள் நடைபெறும் பகுதியாக உள்ளது. மேலும் இப்பகுதியில் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்லும் பெண்கள் மதுபான கடையை அச்சத்துடன் தாண்டி செல்லும் நிலையே உள்ளது. தற்போது புதிதாக திறக்கப்படவுள்ள மதுபான கடை முன்னாள் மேயருக்கு சொந்தமானது.  ஏற்கனவே அப்பகுதியில் அமைந்துள்ள 2 மதுபான கடைகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தி வரும் நிலையில் 3-வதாக மேலும் ஒரு கடை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக் கூடாது.

இவ்வாறு இரத்தினபுரி மக்கள் தெரிவித்னர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...