மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வரும் மக்கள் தரையில் அமர வேண்டிய அவலம்

வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த நாளில், பொதுமக்கள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவாக அளித்து வருகின்றனர். இதனால், திங்கட்கிழமைகளில் எப்போதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பகவே காணப்படுகிறது.



பாலூட்டும் அறை:-

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பச்சிளங்குழந்தைகளுடன் மனு அளிக்கவரும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்குக் கூட ஒதுக்குப்புறமாக ஓர் இடம் இல்லாமல் தவித்து வருவதாக சமீபத்தில் 'சிம்ப்ளிசிட்டி' -யில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. 



புதிய ஆட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டும், இதுவரை பாலூட்டும் அறை அமைக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 

இந்த நிலையில், குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும் நாளான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரளான மக்கள் வந்திருந்தனர். அவர்கள் அமர்வதற்கு நாற்காலிகள் எதுவும் இல்லாமல் தரையில் வெகு நேரம் அமர வேண்டிய சூழல் ஏற்பட்டது.



தண்ணீர் வசதி, வீடு, பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி வருவோரை இப்படி தரையில் அமர்த்தி காத்திருக்கச்செய்வது முறையோ என்று பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...