கோவையில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு பயிற்சி

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாநகராட்சி சார்பில் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. கோவையில் பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் முக்கிய இடங்களில் உள்ள சாலையோர வியாபாரிகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அதனால், அனைத்து சாலையோர வியாபாரிகளையும் கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுவரை, 4,000 பேருக்கு அடையாள அட்டை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டு உள்ளது. 



இதற்கென, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தலைமையில் அமைக்கப்படும் சாலையோர கமிட்டியில், நகர் நல அலுவலர், போக்குவரத்து போலீசார், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் வியாபாரிகள் பிரதிநிதிகள், உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவர். இக்கமிட்டியினர், மாநகராட்சி பகுதியில் ஆய்வு செய்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தை சாலையோர வியாபாரிகளுக்காக தேர்வு செய்யப்படும். அங்கு, வியாபாரிகளை வகைப்படுத்தி இடம் ஒதுக்கப்படும்.



இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறிகையில், சாலையோர வியாபாரிகளுக்கு, மத்திய - மாநில அரசுகள் பல்வேறு உதவிகள் செய்கின்றன. அவற்றை வியாபாரிகள் அறியாமல் உள்ளனர். அதனால், சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். முன்னோடி வங்கி மற்றும் நபார்டு வங்கி அதிகாரிகள், திட்ட அலுவலர், உணவு கலப்பட தடுப்பு பிரிவினர், சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்பர். அடையாள அட்டை பெற்றுள்ள சாலையோர வியாபாரிகள் அழைக்கப்படுவர். மத்திய - மாநில அரசுகள் வழங்கும் நிதியுதவி, மானியம், உணவு பண்டங்கள் தயாரிப்பது, விற்பதில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறை, குப்பையை கொட்ட வேண்டிய இடங்கள் உள்ளிட்டவற்றை, அலுவலர்கள் விளக்குவர். திட்டம் தொடர்பான தொகுப்புரை புத்தகம் தயாராகி வருகிறது. விரைவில் பயிற்சி அளிக்கப்படும்.' இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...