வால்பாறையில் முறைகேடாக மது விற்கப்படுவதைக் கண்டித்து அனைத்துக் கட்சியினர் புகார்

வால்பாறை நகர பகுதியில் செயல்பட்டு வந்த 5 அரசு மதுபானக் கடைகள் உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து மூடப்பட்டன. ஆனால், தற்போது அந்த கடைகள் செயல்பட்டு வந்த இடத்தில் தனிநபர்கள் சிலர் கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சிலர் வெளிபகுதியில் மதுபானங்களை அதிகளவில் வாங்கி வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதனிடையே, மதுபானக் கடையில் ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மதுபானம் தற்போது 200 முதல் 250 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அன்றாடம் ரூ.234 ஊதியம் பெறும் தோட்டத் தொழிலாளர்கள் 250 ரூபாயினை மதுபானத்திற்காக செலவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே, வால்பாறை காவல்துறை ஆய்வாலர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வால்பாறை அனைத்துக் கட்சிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...