கோவையில் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்தால் பிரிக்கால் நிறுவனம் மூடப்படும்- பிரிக்கால் நிர்வாக இயக்குனர் பேட்டி

கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆட்டோ மோட்டிவ் மற்றும் வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் உற்பத்தி தொழிற்சாலை நிறுவனமான பிரிக்கால் நிறுவனத்தில் தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் தொடருமேயானால் வாடிக்கையாளர்கள் சேவையை கருத்தில் கொண்டு கோவையில் பிரிக்கால் நிறுவனம் மூடும் சூழல் ஏற்படும் என அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விக்ரம் மோகன் தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரிக்கால் நிறுவனம் கடந்த 1982 ஆம் ஆண்டு கோவையில் துவங்கப்பட்டது. சர்வதேச அளவில் இருசக்கர, நான்கு சக்கர வாகன உதிரிபாகங்கள் மற்றும் இஞ்சினியரிங் பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி செய்து வரும் இந்நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தின் போது பிரிக்கால் தொழிலாளர்கள் எவ்வித முன் அறிவிப்புமின்றி தன்னிச்சையாக வேலைக்கு விடுமுறை எடுத்ததாக கூறி சுமார் 809 பேருக்கு எட்டு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டது. இதனைக்கண்டித்து, அந்நிறுவன தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பிரச்சனை தொடர்பாக நீதிமன்ற உத்தரவிற்கு கட்டுப்படுவதாக இருதரப்பிலும் முடிவு எட்டப்பட்டுள்ள நிலையில் இன்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விக்ரம் மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பிரிக்கால் நிறுவனத்தில் பிரச்சனைகள் தொடர்ந்தால் வாடிக்கையாளர்களின் நலன் கருதி கோவை பிரிக்கால் யூனிட்டை இடமாற்றம் செய்வதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்தார்.

கோவையை தலைமையிடமாகக் கொண்டு 45 ஆண்டுகளாக  இந்தியா மட்டுமல்லாது பல நாடுகளில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டு வரும் பிரிக்கால் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு தொழிற்துறையினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...