ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ஏரிகள் புனரமைக்கும் பணி குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் தலைமையில் விளக்க கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் இன்று ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் 8 ஏரிகள் புனரமைக்கும் பணி குறித்த இடைநிலை அறிக்கை பற்றிய விளக்ககூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் புனரமைப்பு பணிக்கான மேற்கொள்ளவேண்டிய செயல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், ஏரிகள் புனரமைக்கப்பட்டு வருடம் முழுவதும் ஏரியில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும். ஏரிகளில் வந்து சேரும் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்தல் அவசியம் குறித்து விவாதிக்கப்ட்டது.

எட்டு ஏரிகளையும் இணைக்கும் வகையில் ஒரு மிதி வண்டிப்பாதை அமைத்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஏரி முகப்பை அழகுபடுத்தி மேம்பாடு செய்தல், சுற்றுலா தலங்கள் அமைத்து பயன்பாட்டினை மேம்படுத்துதல், பறவை சரணாலயம் அமைத்தல், மரங்கள் வளர்த்து பசுமைப்படுத்துதல், வளர்ந்த நாடுகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு இணையாக கோவை மாநகராட்சியில் உள்ள 8 ஏரிகளை மேம்படுத்த ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் நகரப் பொறியாளர் (பொ) பார்வதி, மாநகராட்சி மேற்பார்வை பொறியாளர் லட்சுமணன், நிர்வாக பொறியாளர் சரவணகுமார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அருண்பிரகாஷ், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தன்னார் அமைப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...