ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ஏரிகள் புனரமைக்கும் பணி குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் தலைமையில் விளக்க கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் இன்று ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் 8 ஏரிகள் புனரமைக்கும் பணி குறித்த இடைநிலை அறிக்கை பற்றிய விளக்ககூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் புனரமைப்பு பணிக்கான மேற்கொள்ளவேண்டிய செயல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், ஏரிகள் புனரமைக்கப்பட்டு வருடம் முழுவதும் ஏரியில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும். ஏரிகளில் வந்து சேரும் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்தல் அவசியம் குறித்து விவாதிக்கப்ட்டது.

எட்டு ஏரிகளையும் இணைக்கும் வகையில் ஒரு மிதி வண்டிப்பாதை அமைத்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஏரி முகப்பை அழகுபடுத்தி மேம்பாடு செய்தல், சுற்றுலா தலங்கள் அமைத்து பயன்பாட்டினை மேம்படுத்துதல், பறவை சரணாலயம் அமைத்தல், மரங்கள் வளர்த்து பசுமைப்படுத்துதல், வளர்ந்த நாடுகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு இணையாக கோவை மாநகராட்சியில் உள்ள 8 ஏரிகளை மேம்படுத்த ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் நகரப் பொறியாளர் (பொ) பார்வதி, மாநகராட்சி மேற்பார்வை பொறியாளர் லட்சுமணன், நிர்வாக பொறியாளர் சரவணகுமார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அருண்பிரகாஷ், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தன்னார் அமைப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...