டெங்குவால் தொடரும் உயிர் பலி: திருப்பூரைச் சேர்ந்த சிறுவன் மரணம்


கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் முழுமையாக குணப்படுத்தக் கூடிய இந்த காய்ச்சல் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், டெங்குவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம் சேவூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (10). இவருக்கு கடந்த சில நாட்களாக தொடர் காய்ச்சல் இருந்துள்ளது. தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவருக்கு காய்ச்சல் குணமடையவில்லை. தொடர்ந்து அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரின் இரத்த மாதிரிகளை எடுத்த மருத்துவர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது பிரவீனுக்கு டெங்கு இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து தனி வார்டில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த 14-ம் தேதியன்று பிரவீன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மக்களிடையே டெங்கு குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே இந்த மரணத்திற்கு காரணம் என்றும், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை மக்கள் அணுக வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...