அரசின் வருமானத்திற்கு புதிய டாஸ்மாக்- மாவட்ட ஆட்சியருக்கு பூங்கொத்து கொடுத்து பாராட்டிய மக்கள்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணப்ப நகர் பகுதியில் ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் மதுபானக்கடைகள் இயங்கி வந்த நிலையில் கடந்த வாரம் புதிதாக மேலும் இரண்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.



ஏற்கனவே இயங்கி வந்த மதுபான கடைக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து அதை அகற்ற கோரியுள்ள நிலையில் புதிதாக கடை திறந்ததைக் கண்டித்தும், அரசின் வருமானத்திற்கான புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க அனுமதி அளித்த மாவட்ட ஆட்சியரைக் கண்டித்தும்  இன்று பூங்கொத்து கொடுக்க அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னாள் மாமன்ற உறுப்பினர் மீனா லோகு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகதிற்கு வந்தனர்.

இதனைத்தொடர்ந்து, அவர்களைத் தடுத்த காவலர்கள் பொதுமக்கள் கொண்டு வந்த பூங்கொத்தை பறிமுதல் செய்ததால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...