விவசாயிகளின் நலன் கருதி, யானையை விரட்ட புதிய நவீன துப்பாக்கி அறிமுகம்

யானை மனித மோதல்கள், பயிர் சேதம் தவிர்ப்பதற்காக விவசாயிகள் கேட்கும் நவீன துப்பாக்கியை வழங்க தயாராகும் வனத்துறை. விவசாயிகள் கேட்பதைப் போல துப்பாக்கி உரிமம் வழங்க அரசு நிர்வாகிகள் மறுத்து வந்ததால், யானையால் பாதிக்கப்படும் விவசாயிகள் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் நலன் கருதியும், பயிர்கள் மற்றும் உயிரிழப்புகள் யானையால் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு வனத்துறை புதிய துப்பாக்கி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் வன விலங்குகளை விரட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட பைபர் குழாய் துப்பாக்கியின் செயல்பாடு பயன்பாட்டிற்கு எளிதாகவும், குறைவான விலையில் தயாரிக்க முடியும் என்ற காரணத்தால் தமிழக வனத்துறை கோவை பெரிய நாயக்கன்பாளையம் சரகத்திலுள்ள விவசாயிகளுக்கு இதை வழங்க இருக்கிறது.

பைபர் குழாய் துப்பாக்கி குறித்து வனத்துறையினர் கூறுகையில், பைபர் குழாயினுள் கார்பைடு கல் மற்றும் ஐந்து மில்லி நீர் ஊற்றி லைட்டரை கொண்டு பற்ற வைத்தால் வெடி சத்தமும், அழுகிய முட்டை போன்ற தூர் நாற்றமும் வெளிவருவதால், யானைகள் அங்கிருக்க முடியாமல் ஓடும் நிலைக்கு தள்ளப்படும் எனவும் யானையை விரட்ட பயன்படுத்தப்படும் பட்டாசுகள் மற்றும் ஆட்களின் செலவுகளை் குறைக்க வாய்புள்ளது என தெரிவித்தனர். 800 ரூபாயில் தயாரிக்கக் கூடிய இந்த தூப்பாக்கியை விவசாயிகள் எளிதாக வாங்கி பயன்படுத்த முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...