தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் ஊக்க தொகை பெற விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு

தேசிய அளவிலான  விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வழங்கப்படும் ஊக்கத் தொகை பெற விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2017- 2018 ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள உயர் நிலை, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் பயிலும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகைக்கான விண்ணப்பங்களை வரும் 2017 ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் சமர்பிக்கக கோரி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு 10,000 ரூபாயும், கல்லூரி மற்றும் பல்கலைக் கழக மாணவர்களுக்கு 13,000 ரூபாயும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1-7-2016 முதல் 30-6-2017 முடியவுள்ள காலகட்டத்தில் தேசிய அளவிலான விளையாட்டில் பதக்கங்கள் பெற்றவர்கள் மட்டுமே இதற்கு தகுதியானவர்கள். குழு போட்டிகளில் முதல் 2 இடங்களையும், தனியார் போட்டிகளில் முதல் 3 இடங்களையும் பிடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வெற்றி பெற்ற வீரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் இந்திய பள்ளி விளையாட்டுகள் கூட்டமைப்பு, மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை அனைத்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகங்களில் 10 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் அல்லது விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட இந்த விண்ணப்பங்கள் 2017 ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் கூடுதல் விபரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை அலுவலகத்தை 044- 28364322 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...