கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்


கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் முன்னிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோல் கான் தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், சட்டம் ஒழுங்கு காவல் துறை துணை ஆணையர், மாவட்ட வருவாய் அலுவலர், இணை வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் 2016 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களிடமிருந்து வசூல் செய்யப்பட்ட வைப்புத் தொகையினை உடன் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கு வழங்க தெரிவிக்கப்பட்டது.

மேலும், தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் பழுதுகள் ஏதேனும் இருப்பின் உரிய முறையில் பழுது பார்த்து தயார் நிலையில் வைக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பெறப்படும் மனுக்கள் மற்றும் புகார்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுத்து தீர்வு காண மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தினார்.

கோவை மாவட்டத்தில் எஸ்ஆர்பி அம்மணி அம்மாள் மேல் நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம் மற்றும் பள்ளப்பாளையம் பேரூராட்சி சமுதாயக் கூடத்தில் காவல் துறை பாதுகாப்புடன் உள்ளாட்சித் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையும், மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையையும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் ஆய்வு செய்தார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...