மறைந்த ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருந்தால் அது நீதி விசாரணையில் வெளிவரும்- சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன்

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருந்தால் அது நீதி விசாரணையில் வெளியேவரும் என கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் தெரிவித்தார்.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்தப்படும். வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்ற தற்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்து, கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகை முன்பாக அதிமுக அம்மா அணியினர் இன்று  பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக அம்மா அணியின் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன்அர்ஜூனன், கவுண்டம்பாளையம்  சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கொண்டாட்டத்துக்கு பின்னர் கோவை தெற்கு சட்ட மன்ற தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்ற  அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஜெயலலிதாவின் கனவு திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றி வருகிறார்.

புரட்சித் தலைவி அம்மா அணியினர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று சொல்வார்கள். நீதி விசாரணை, சி.பி.ஐ விசாரணை எல்லாமே மனிதர்கள்தான் செய்கின்றனர். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருந்தால் அது நீதி விசாரணையில் வெளியேவரும். முனுசாமியின் கோரிக்கை சி.பி.ஐ விசாரணை, நாங்கள் நீதிவிசாரணை என்ற மக்களின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளோம்.

வேதா இல்லத்தில் தனி நபர்களுக்கு உரிமை இருந்தால் அரசு அதற்கான இழப்பீட்டை கொடுக்கும். வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டால் அது ஜெயலலிதா மாணவ, மாணவியருக்கு உழைத்த உழைப்பின் சின்னமாக இருக்கும்.

இவ்வாறு கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...