கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவையில் டெங்கு வேகமாகப் பரவி வருவதையொட்டி கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் கோவை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்தும், கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு முயற்சிகளும் எடுத்து வருகிறது.



பருவமழைக் காலங்களில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் நோய்கள் பாதிப்பு வருவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை காலத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர மாவட்ட நிர்வாகம், சுகாதாரம் உள்ளிட்ட அந்தந்த உள்ளாட்சித்துறை பணியாளர்கள் உரிய நடவடிக்கை எடுத்து கோவை மாவட்டத்தில் பரவலாக பெருகி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இந்நிலையில், கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வார்டுக்கும், டெங்கு காய்ச்சல் வார்டுக்கும் நேரில் சென்று பார்வையிட்டார். உடன், அரசு மருத்துவமனையின் டீன் அசோகன் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.



Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...