பொது தேர்தல் நடந்தால் தான் மக்கள் விரும்பும் ஆட்சி அமையும் -மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேரின் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிக்கைக்கு பின்னரும் தமிழக கவர்னர் தொடர்ந்து அமைதி காப்பது ஏன் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு வீணாவதற்கு காரணமான இருக்கும்  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகு வேண்டும் என வலியுறுத்தினார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிக்கை வைத்த பின்னரும் ஆளுனர் தொடர்ந்து அமைதி காப்பது ஏன் என கேள்வி எழுப்பியவர், தமிழக அரசியல் சூழல் தெரிந்தும் ஆளுனர் மும்பை சென்றுள்ளதில் உள்நோக்கம் இருப்பதாக கருவதாகவும், இது பல விதமான சந்தேகங்களை எழுப்புகிறது என தெரிவித்தார்.

பொது தேர்தல் நடக்க வேண்டும், அப்போது தான் மக்கள் விரும்பும் ஆட்சி அமையும் என சுட்டிக் காட்டினார். சபாநாயகர் தனபால் முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை, குழப்பத்தில் ஆதாயம் தேடும் சூழல் என குற்றம்சாட்டிய அவர், திருமாவளவன் அதை வரவேற்பது சரியல்ல என தெரிவித்தார். 

சாதியின் அடிப்படையில் முதல்வர் நியமனம் செய்வது தகுந்ததள்ள எனவும், இரு அணிகள் இணைப்பு என்பது நாடகமே என புகார் கூறினார். சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்றதாக வெளிவரும் வீடியோ பொய்யாக இருக்க வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்தார்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...