கோவை மாநகராட்சி சார்பாக செவிலியர்களுக்கு டெங்கு நோய் ஆரம்ப குறிப்புகள் பற்றி மேலாண்மை கருத்தரங்கம்

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக, கோவை மாநகராட்சி சார்பாக பல்வேறு நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று (ஆகஸ்ட் 23) கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில், உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் நேமிநாதன், அரசு மருத்துவமனை செவிலியர்கள், நகர்நல மையங்களில் பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு, டெங்கு நோயின் ஆரம்ப குறிப்புகள் மேலாண்மை கருத்தரங்கம் நடத்தினார்கள்.

இந்த கருத்தரங்கத்தில், காய்ச்சலை எவ்வாறு பிரித்து கண்டறிவது, எந்த வகை காய்ச்சலை தொடர் சிகிச்சைக்காக உயர் மையத்திற்கு அனுப்புவது, காய்ச்சல் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு ஐசியு-வில் உரிய சிகிச்சை மேற்கொள்ளுவது என்பது பற்றி மருத்துவர் நேமிநாதன் பல்வேறு ஆலோசனைகளை செவிலியர்களுக்கு வழங்கினார்.

இக்கூட்டத்தில், அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், அனைத்து மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...