கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த திருமுருகன் காந்தி மீண்டும் கைது!

ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசி வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்ற சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சிங்களர்களின் செயலைக் கண்டித்தும், இலங்கை அரசை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தியும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு மதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், வைகோ மீது சிங்களர்கள் தாக்கப்பட்டத்தைக் கண்டித்து நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை தமிழ்புலிகள் அமைப்பினர் இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்புலிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நாகை திருவள்ளுவன் தலைமையில் நடந்த முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பிரவீன்குமார், அந்த அமைப்பைச் சேர்ந்த சிவகுமார் ஆகியோர் சென்றனர். 

அப்போது, நுங்கம்பாக்கம் காவல்துறை துணை ஆணையர், அவர்களைத் தடுத்துநிறுத்தியுள்ளார். அப்போது, தடையை மீறி போராட்டத்துக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்து மருத்துவமனைக்குப் புறப்பட்ட திருமுருகன் உட்பட 3 பேரும் போகும் வழியில் சென்னை லயோலா கல்லூரி அருகில் உள்ள கடையில் டீக் குடித்துக்கொண்டிருந்தனர். 

அப்போது, நுங்கம்பாக்கம் காவல்துறை துணை ஆணையர் தலைமையில் பத்து காவலர்கள் அந்த இடத்துக்கு திடீரென சென்று,  டீக் குடித்துக்கொண்டிருந்த திருமுருகன் காந்தி உட்பட 3 பேரையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...