குற்ற சம்பவங்களை தடுக்க இருசக்கர வாகன தொழிலாளர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்- துணை ஆணையர் பேச்சு


கோவை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக கோவை மண்டல இரு சக்கர வாகன பணிமனை தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோருக்கு குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் பெருமாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



அப்போது அவர் பேசியதாவது:-

பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு தமிழகத்தில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இருசக்கர வாகன பணிமனை தொழிலாளர்கள் அனைவரையும் இணைப்பது மகிழ்ச்சி. கோவையில் இரு சக்கர வாகன உதவியுடன் பல குற்றங்கள் நடைபெறுகிறது.



முறைகேடான வாகன மாற்றங்கள் மற்றும் பல்வேறு தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும். இந்த குற்றங்களை யாரிடம் கூறுவது என்பது போன்ற தயக்கம் இனி வேண்டாம். உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளலாம்.

செயின் பறிப்பு தொடர்பாக தகவல் கிடைத்தால் உடனடியாக தகவல் கொடுக்கலாம்.



நீங்கள் அனைவரும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பில் இணைந்துவிட்டது மிகவும் மகிழ்ச்சி. அதே நேரத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற அங்கீகாரத்தை உங்களுக்கு பாதுகாப்பாக உபயோகித்து குற்றவாளியாக மாறிவிட வேண்டாம். நீங்கள் தவறு செய்தால் காவல்துறையால் அதை அனுமதிக்க முடியாது.

இவ்வாறு கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் பெருமாள் பேசினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...