எம்எஸ்எம்இ வளர்ச்சி நிலையம் சார்பில் விற்பனையாளர்கள் அபிவிருத்தி நிகழ்ச்சி

மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் எம்எஸ்எம்இ வளர்ச்சி நிலையம், கோவை மற்றும் குன்னூர் பேஸ்டர் இன்ஸ்டிடியூட், அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை இணைந்து ஒரு நாள் விற்பனையாளர் அபிவிருத்தி நிகழ்ச்சி வரும் அக்டோபர் 11ம் தேதியன்று குன்னூர் பேஸ்டர் இன்ஸ்டிடியூட்-யில் நடைபெறவுள்ளது.

சிறு, குறு தொழில் முனைவோர்க்கான இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் பொது கொள்முதல் கொள்கை-2012 பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. இக்கொள்கையின் மூலம் மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள், தங்களது ஆண்டு மொத்த கொள்முதலில் 20 சதவிகிதம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள் அல்லது அந்நிறுவனங்கள் வழங்கும் சேவைகள் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும்.

இதன் உள் ஒதுக்கீடு, அதாவது 20 விழுக்காட்டில் 4 விழுக்காடானது பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் நடத்தும் குறு மற்றும் சிறு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள் அல்லது அவை வழங்கும் சேவைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் குன்னூர் பேஸ்டர் நிறுவனம் மற்றும் அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை ஆகியவற்றிற்கான புதிய உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களை அடையாளம் காணும் வகையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில், எஸ், எஸ்டி தொழில் முனைவோர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Newsletter

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...