கோவை மாநகராட்சியின் வரி உயர்வை திரும்பப் பெறாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்- அனைத்துக்கட்சி முடிவு

உயர்த்தப்பட்ட குடிநீர் வைப்புத் தொகை மற்றும் குப்பை வரி உள்ளிட்ட வரி உயர்வினை திரும்பப் பெறாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை இரயில் நிலையம் அருகேயுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கோவை மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட குடிநீர் வைப்புத் தொகை, குப்பைவரி உள்ளிட்டவற்றை திரும்பப் பெற வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக சட்ட மன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கூறியதாவது:-

மாநகராட்சியால் உயர்த்தப்பட்டுள்ள குடிநீர் வைப்புத் தொகை அதிகரிப்பு மற்றும் குப்பை வரியால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் இதனை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும். 

மேலும், வரும் நவம்பர் 3-ம் தேதியன்று கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாaட்டம் நடைபெறும்.

மாநகராட்சி நிர்வாகம் வரி குறைப்புக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிடில் அடுத்த கட்டமாக அனைத்துக் கட்சி மாநில தலைவர்களுடன் கலந்தாலோசித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு திமுக சட்ட மன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...