ஜி.எஸ்.டியில் சிறு வர்த்தகர்களுக்கு சலுகை அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி

நாடு முழுவதும் கடந்த ஜுலை 1-ம் தேதி அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரி விதிப்பில், பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அண்மையில் நடந்த சரக்கு, சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் சிறு, நடுத்தர வர்த்தகர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டன. மேலும், பிராண்ட் அல்லாத ஆயுர்வேத மருந்துகள், தின்பண்டங்கள் உள்பட 27 பொருள்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

அண்மையில் ஜி.எஸ்.டி. மத்திய அரசு கொண்டு வந்த மாற்றங்கள் :

* 1.5 கோடி ரூபாய்க்கு கீழ் வருவாய் எடுக்கும் வணிகர்கள், 3 மாதங்களுக்கு ஒருமுறை ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்தால் போதும்.

* ஏசி உணவகங்களின் ஜிஎஸ்டி வரி 18% இருந்து 12% ஆக குறைக்க ஒப்புதல் கிடைத்துள்ளது

* ரூ.50,000கும் மேல் நகைகள் வாங்குபவர்கள் ஆதார், பேன் விவரங்களை வழங்காத தேவையில்லை.

* ஸ்டேஷனரி பொருட்கள் மீதான வரி 28ல் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது

* டீசல் எஞ்சின் பொருட்கள் மீதான வரி 28ல் இருந்து 18 சதவீதமாக குறைப்பு

* ப்ராண்டுகள் அல்லாத ஆயுர்வேத மருந்துகள் மீதான வரி 12ல் இருந்து 5 சதவீதமாக குறைந்தது

* ஏப்ரல் 1 முதல் ஈ-வாலெட் எனப்படும் புதிய இணையதள கணக்கு துவக்கப்படும்

* ஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யில் (IGST) இருந்து 6 மாதங்கள் விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது/ 

இந்த நடவடிக்கையை எடுத்த பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண்ஜேட்லி ஆகியோருக்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக ந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் வனிதா மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் சிறு மற்றும் குறு நிறுவனங்களில் நிலவி வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. இந்த முக்கிய முடிவின் மூலம் மத்திய அரசு மக்களுக்கு ஏற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வதை காட்டுகிறது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் மூலம் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகள் பயன்பெறுகின்றன. 

இதேபோன்று குறிப்பிட்ட ஒருசில துறைகளிலும் விதிக்கப்பட்ட வரிவிதிப்பில் மாற்றம் கொண்டு வரப்படும் என நம்புகிறோம். சிறு, குறு தொழில்களின் ஒன்றான கிரைண்டர் தயாரிப்புகளுக்கு விதிக்கப்பட்ட வரி விதிப்பையும் குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...