சூலூர் வட்டத்திற்கு உட்பட்ட அருந்ததிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், சூலூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தாழ்த்தப்பட்ட அருந்ததி இன மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி அருந்ததியர் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அம்மனுவில் கூறியிருப்பதாவது:-

சூலூர் வட்டம், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம், பாப்பம்பட்டி கிராமம் மற்றும் கள்ளப்பாளையம், இடையர்பாளையம், கண்ணம்பாளையம் ஆகிய பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். 

எனவே, பாப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் புறம்போக்கு நிலம் மற்றும் பஞ்சமி நிலங்களை ஆய்வு செய்து தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மற்றும் பொது மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.



இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...