ஈஷா விவகாரம்: பெற்றோர்கள் சந்திப்பதற்கு தடைகோரி மகள்கள் தொடர்ந்த வழக்கு விசாரணை அக்.20-க்கு ஒத்தி வைப்பு

கோவை மாவட்டம், வடவள்ளி பகுதியைச் சேர்ந்த முனைவர் காமராஜ், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து விட்டு தொண்டு நிறுவனம் தொடங்கி, 5000 மகளிர் சுய உதவிக்குழுக்கள் நடத்தி வருகிறார்.

இவரது மகள்களான கீதா, லண்டனில் எம்.டெக் முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இளைய மகள் லதா பி.டெக் முடித்து இருந்தார்.

இந்நிலையில், ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சியில் சேர்ந்த கீதா மற்றும் லதா ஆகியோரை மூலை சலவை செய்த ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ், நான்தான் கடவுள் எனக்கூறியதோடு சகோதரிகளான இருவருக்கும் திருமணம் நடக்காமல் இருக்க மொட்டை அடித்துள்ளார்.

மேலும், காவி உடைகளை அணிவித்து ஆசிரமத்திலேயே தங்க வைத்து விட்டாதாக பெற்றோர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. தொடர்ந்து, தங்களது குழந்தைகளை பார்க்க ஈஷா மையத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை எனவும், இருவரையும் மீட்டுத்தருமாறும் கோவை மாவட்ட ஆட்சியரிடமும், காவல் ஆணையரிடமும் மனு அளித்து எவ்வித நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனையடுத்து சகோதரிகள் இருவரும் விருப்பத்தின் பேரிலேயே ஈஷாவில் தங்கியிருப்பதாக கோவை முதன்மை நீதிபதியின் நேரடி விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், பெற்றோர்கள் தங்களை சந்திக்க தடை விதிக்கக்கோரி கீதா மற்றும் லதா ஆகியோர் தொடுத்த வழக்கு விசாரணை திங்களன்று நீதிபதி மலர்மன்னன் முன்னிலையில் நடைபெற்றது. இதில், இந்த வழக்கு விசாரணையை வருகின்ற 20-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...