ஜி.எஸ்.டி வரியை 5 சதவீதமாகக் குறைக்க வலியுறுத்தி பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டம்

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கத்தினர் (காட்மா) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள துணை அஞ்சலகத்தில் இருந்து பிரதமர், மத்திய அமைச்சர்கள், தமிழக முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடத்தினர். 



அப்போது,  ஜாப் ஆர்டர்களில் ஈடுபடும் குறுந்தொழில் கூடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத ஜி.எஸ்.டி வரியினை 5 சதவீதமாக குறைக்க கோரியும், ஆண்டுக்கு இருபது இலட்ச ரூபாய்க்கு குறைவாக வருவாய் ஈட்டும் குறுந்தொழில் கூடங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து முழு விலக்கு அளிக்க கோரியும் 20 ஆயிரம் மின்னஞ்சல் மற்றும் தபால் அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர். 



மேலும், ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பின்னர் குறுந்தொழில் கூடங்களில் 50 சதவீத உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அண்மையில் அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி சலுகைகளில் குறுந்தொழிலுக்கு எந்த சலுகையும் இல்லை என குறுந்தொழில் முனைவோர்கள் குற்றம்சாட்டினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...